டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி மீண்டும் தேர்வு!

ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image

படம் | X

Updated On :24 ஜூலை 2024, 9:39 pm IST

ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புகழ்பெற்ற ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீடா அம்பானி , பாரிஸில் நடைபெறும் உலகளாவிய ஒலிம்பிக் அமைப்பின் 142 ஆவது அமர்வில், இந்தியாவிலிருந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தனிநபர் உறுப்பினராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து நீடா அம்பானி கூறுகையில், “சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உள்ள நண்பர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இணைந்த முதல் இந்தியப் பெண் என்ற முறையில், நீடா அம்பானி, ஒலிம்பிக் பார்வையை மேம்படுத்தி, உலகளாவிய அமைப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் முதல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை மும்பையில் நடத்துவதில் நீடா அம்பானி முக்கிய பங்கு வகித்தார்.

வருகிற 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏலம் எடுக்க இந்தியா திட்டமிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.