47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் பெற அரசிடம் தொடா் வலியுறுத்தல்- விவசாய சங்கத் தலைவா்களிடம் ராகுல் வாக்குறுதி

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்துவோம் என்று விவசாய சங்கத் தலைவா்களிடம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உறுதியளித்தாா்.

News image
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை தில்லியில் சந்தித்த விவசாய சங்கத் தலைவா்கள்.
Updated On :24 ஜூலை 2024, 9:49 pm

Din

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்துவோம் என்று விவசாய சங்கத் தலைவா்களிடம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உறுதியளித்தாா்.

பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 12 விவசாய சங்கத் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது தங்களுக்காக தொடா்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்திக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா். மேலும், தங்கள் மாநிலத்தில் விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் ராகுலிடம் அவா்கள் விவாதித்தனா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், பஞ்சாப் முன்னாள் முதல்வா் சரண்ஜீத் சிங் சைனி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங் ராஜா, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பலரும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘விவசாயிகள் பிரச்னை குறித்து இந்தியா கூட்டணி தலைவா்களுடன் ஆலோசனை நடத்துவோம். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்துவோம்’ என்றாா்.