செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் கொடுத்த ராகுல் காந்தி

சுல்தான்பூரில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத்க்கு புதிதாக தையல் இயந்திரம் ஒன்றை ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார்.
ராகுல் காந்தி வழங்கிய தையல் இயந்திரம்.
ராகுல் காந்தி வழங்கிய தையல் இயந்திரம்.
Published on
Updated on
1 min read

சுல்தான்பூரில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத்க்கு புதிதாக தையல் இயந்திரம் ஒன்றை ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஆக 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ராகுல் காந்தி வழங்கிய தையல் இயந்திரம்.
பெங்களூரு விடுதியில் இளம்பெண் கொலையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

முன்னதாக இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சுல்தான்பூர் சென்ற ராகுல் காந்தி இடையில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத் கடைக்கு சென்றார். தொடர்ந்து அந்த தொழிலாளியிடம் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அந்த தொழிலாளி சில உதவிகளை கேட்டுள்ளார்.

இந்த நிலையில் சுல்தான்பூர் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத்க்கு புதிதாக தையல் இயந்திரம் ஒன்றை ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார். இதனால் இனி கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராம்சைத், ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பிவைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com