சுல்தான்பூரில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத்க்கு புதிதாக தையல் இயந்திரம் ஒன்றை ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஆக 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சுல்தான்பூர் சென்ற ராகுல் காந்தி இடையில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத் கடைக்கு சென்றார். தொடர்ந்து அந்த தொழிலாளியிடம் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அந்த தொழிலாளி சில உதவிகளை கேட்டுள்ளார்.
இந்த நிலையில் சுல்தான்பூர் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத்க்கு புதிதாக தையல் இயந்திரம் ஒன்றை ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார். இதனால் இனி கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராம்சைத், ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பிவைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக - காங்கிரஸ் கூட்டணியா? ராகுல் காந்தியின் பதிவு வைரல்!

தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து!

கரூரில் பதுக்கிவைத்திருந்த 240 மதுபாட்டில்கள் பறிமுதல் தையல் தொழிலாளி கைது

சொந்த நலனுக்காக விவசாயத்தைத் தியாகம் செய்யும் பாஜக அரசு: ராகுல் காந்தி
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு



