மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளத்தில் இதுவரை இல்லாத பேரழிவு: முதல்வர் பினராயி விஜயன் வேதனை

கேரளத்தில் இதுவரை இல்லாத பேரழிவு என முதல்வர் பினராயி விஜயன் வேதனையாக கூறியுள்ளார்...

News image
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)
Updated On :30 ஜூலை 2024, 11:48 am

DIN

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 90 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இது கேரளத்தில் இதுவரை இல்லாத பேரழிவு என முதல்வர் பினராயி விஜயன் வேதனையாக கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “இது கேரளத்தில் இதுவரை இல்லாத பேரழிவாகும்.

வயநாடு, கோழிக்கோட்டில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்டப் பகுதிக்கு தடயவியல் நிபுணர்கள் சென்றுள்ளனர். மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவக்குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மண்ணில் புதைந்தும் எரிந்தும் 6 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. இதனால், 350 வீடுகளி மின் தடை ஏற்பட்டுள்ளது.

வயநாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் 57 செ.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம். திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புப் படை இணைந்து பணியாற்றி வருகின்றன. வயநாட்டில் உள்ள 45 உள்பட மாநிலம் முழுவதும் 118 முகாம்களில் 5,531 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்”.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.