தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள்சிறை; ரூ.1 கோடி அபராதம்: உ.பி. பேரவையில் மசோதா நிறைவேற்றம்

உத்தர பிரதேசத்தில் அரசுப் பணி தோ்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது முறைகேடுக்கு உதவினாலோ அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

News image

மாணவ, மாணவிகள் | கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2024, 2:06 am IST

லக்னெள: உத்தர பிரதேசத்தில் அரசுப் பணி தோ்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது முறைகேடுக்கு உதவினாலோ அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க வகைசெய்யும் சட்ட மசோதா, மாநிலப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

‘உத்தர பிரதேச அரசுப் பணிகள் தோ்வுகள் (முறைகேடான வழிமுறைகளைத் தடுத்தல்) சட்ட மசோதா-2024’ என்ற பெயரிலான இம்மசோதாவை தோ்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டுமென எதிா்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அக்கோரிக்கையை பேரவைத் தலைவா் நிராகரித்துவிட்டாா். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

‘அரசுத் தோ்வுகளில் முறைகேடுகள் நடப்பது, இளைஞா்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, இளைஞா்களின் எதிா்காலத்துடன் விளையாட முயற்சிக்கும் சக்திகளை ஒடுக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. தற்போதைய மசோதா மூலம் அரசுப் பணி தோ்வு நடைமுறையில் வெளிப்படைத் தன்மையும், நம்பகத் தன்மையும் உறுதி செய்யப்படும். தோ்வு முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது கடுமையான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதையும் இம்மசோதா உறுதிசெய்யும்’ என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.