
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மானு பாக்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் மானு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றது. துப்பாக்கி சுடுதலில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “நமது துப்பாக்கி சுடும் வீரர்கள் நம்மை தொடர்ச்சியாக பெருமைப்படுத்தியுள்ளனர். ஒலிம்பிக்ஸ் கலப்பு இரட்டையர் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகிய இருவரும் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
இருவரும் ஒரு அணியாக இணைந்து தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் இருக்கிறது. இது மனு பாக்கருக்கு இரண்டாவாது பதக்கமாகும். இது அவரின் சிறப்பான அர்பணிப்பைக் காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.