ஒடிசா மாநிலத்தின் பரதீப் துறைமுகத்தில் பண விவகாரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சீன சரக்குக் கப்பலை துறைமுக அதிகாரிகள் சிறைப்பிடித்தனர்.
அட்மிரால்டி சட்டம் எனப்படும் கடல்சார் சட்டப்படி கடல்சார்ந்த உரிமைகோரல்களை அமலாக்குவது தொடர்பாக எந்தவொரு கப்பலின் உரிமை, கட்டுமானம், உடைமைகள், நிர்வாகம், செயல்பாடு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் கப்பலை சிறைப்பிடிக்கலாம் என கூறப்படுகிறது.
கப்பல் உரிமையாளருக்கும் கப்பலுக்கு மரைன் பெட்ரோல் அனுப்பிய நிறுவனத்துக்கும் இடையே பணம் வழங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
கப்பலின் உரிமையாளர் ரூ.99.81 லட்சத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு செலுத்தத் தவறியதாக சரக்குகளை அனுப்பிய நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆவணங்களை சரிபார்த்த ஒடிசா உயர்நீதிமன்றம் கப்பலை சிறைபிடிக்கும் உத்தரவை திங்களன்று (ஜூலை 29) வழங்கியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கப்பல் துறைமுகத்திலேயே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எண்ணெய் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்! மாலுமிகளின் நிலை என்ன?

குஜராத் துறைமுகம் வரும் 22 கப்பல்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சா்வதேச மகளிா் தின விழா: ஆட்சியா் பங்கேற்பு

ஈரான் போா்க் கப்பல் மூழ்கடிப்பு: இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு



