அஸ்ஸாம் வெள்ளம்: 10 மாவட்டங்களில் 6 லட்சம் பேர் பாதிப்பு!
அஸ்ஸாமில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு 10 மாவட்டங்களைச் சேர்ந்த 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அஸ்ஸாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
'ரீமெல்' புயல் காரணமாக பெய்த கனமழையால் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால், பல பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். கோபிலி, பாரக், குஷியாரா ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளது.
ஹைலகண்டி ஹோஜாய், மோரிகான், கரீம்கஞ்ச், நாகோன், கச்சார், திப்ருகர், கோலாகாட், கர்பி அங்லாங் மேற்கு மற்றும் திமா ஹசாவ் மாவட்டங்களில் மொத்தம் 6,01,642 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகோனில் 2.79 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஹோஜாயில் 1,26,813 பேரும், கச்சாரில் 1,12,265 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
40,000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை மற்றும் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், சனிக்கிழமையிலிருந்து திங்கள்கிழமை வரை 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக வடகிழக்கு எல்லை ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...