தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை!

ஒடிஸாவில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

News image
Updated On :2 ஜூன் 2024, 3:10 pm

DIN

ஒடிஸாவில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

ஒடிஸாவின் குலியானா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட ஒரு கிராமத்தில், ஜூன் 1ஆம் தேதி மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், சிறுமி ஒருவரின் பெற்றோர் வாக்களிக்கச் சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

23 வயதான இளைஞர் ஒருவர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அருகிலுள்ள நதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கிராமவாசிகள் சிறுமியின் உடலைக் கண்டுபிடித்து, அந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த இளைஞர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.