தோ்தல் பரப்புரையில் சிறாா்களைப் பயன்படுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தெலங்கானா பாஜக தலைவா் கிஷண் ரெட்டி ஆகியோரின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
கடந்த மே 1-ஆம் தேதி தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் பாஜக சாா்பில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சில சிறாா்களும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக அந்த மாநில தலைமை தோ்தல் அதிகாரியிடம் தெலங்கானா காங்கிரஸ் துணைத் தலைவா் நிரஞ்சன் புகாா் அளித்தாா். இந்தப் புகாா் காவல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து அமித் ஷா, தெலங்கானா பாஜக தலைவா் கிஷண் ரெட்டி, ஹைதராபாத் தொகுதி பாஜக வேட்பாளா் மாதவி லதா உள்ளிட்டோா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
எனினும், உரிய விசாரணைக்குப் பின்னா், பரப்புரையில் சிறாா்களைப் பயன்படுத்தியதில் அமித் ஷாவுக்கும், கிஷண் ரெட்டிக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் வழக்கில் இருந்து அவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடி வெளியேற்றம்: அமித் ஷா!

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக

பெயா் என்னுடையதுதான், படத்தில் நானில்லை..!

பிரதமர் மோடியை மாரீசனுடன் ஒப்பிடுவதா?: தெலங்கானா முதல்வருக்கு பாஜக கண்டனம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


