உத்தரப் பிரதேசத்தில், அயோத்தி உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தொடர் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 543 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் அயோத்தி நகர் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியும் ஒன்று. அயோத்தியில் பாஜக முன்னிலை பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 5.37 மணி நிலவரப்படி வெளியான வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
ஃபைசாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,27,005 வாக்குகளும் பாஜக வேட்பாளர் லல்லு சிங் 4,72,222 வாக்குகளும் பெற்றுள்ளனர். 54,783 வாக்குகள் வித்தியாசத்தில் அவதேஷ் பிரசாத் முன்னிலையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு சமாஜ்வாதி எம்பிக்கள் ஆதரவு!

ராமர் கோயில் நிதி முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனு மீது அரசு பதில் அளிக்க உத்தரவு!

குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீள முதலை!
உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



