மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ராமர் கோயில் நிதி முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனு மீது அரசு பதில் அளிக்க உத்தரவு!

உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாராணைக் குழு, அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

உச்சநீதிமன்றம், உள்படம்: ராமர் கோயில் - எக்ஸ்

Updated On :13 ஜூலை 2026, 9:47 pm IST

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், மத்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இத்துடன் இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாராணைக் குழு, விசாரணை நிலை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயிலை நிர்வகித்து வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்து, மத்திய புலனாய்வுத் துறை மூலம் விசாரணை நடத்தவும், தலைமை கணக்குத் தணிக்கையாளர் மூலம் தணிக்கை செய்யவும் கோரி, நரேந்திர குமார் கோஸ்வாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதுமட்டுமின்றி சிபிஐ விசாரணைக்கோரி மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை இன்று (ஜூலை 13) விசாரித்தது.

மனுவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ராமர் கோயில் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரும் மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுமட்டுமின்றி உத்தரப் பிரதேச அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுவின் தற்போதைய விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது தொடர்பான நிலை அறிக்கை முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Summary

Ayodhya Ram Mandir Donation Theft row Supreme Court Issues Notice To Union, UP Temple Trust On Pleas Seeking CBI Probe

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.