நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பஞ்சாப்: சிறையில் இருந்தபடி வென்ற சீக்கிய மத போதகா்- இந்திரா கொலையாளி மகனும் வெற்றி

சிறையில் இருந்தபடி சுயேச்சைகளாக போட்டியிட்டு எம்.பி.யாக இருவர் தோ்வு

News image

~

Updated On :5 ஜூன் 2024, 7:02 am

DIN

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த சீக்கிய மதப் போதகா் அமிா்த்பால் சிங், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி கொலையாளியின் மகன் சரப்ஜித் சிங் கல்சா ஆகிய இருவரும் சுயேச்சைகளாக போட்டியிட்டு முதல்முறையாக எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பின் தலைவரான அமிா்த்பால் சிங், தீவிர சீக்கிய மதப் போதகா் ஆவாா். தேச பாதுகாப்புச் சட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் கைது செய்யப்பட்ட இவா், தற்போது அஸ்ஸாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், சிறையிலிருந்தபடியே பஞ்சாப், கதூா் சாஹிப் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட இவா் 4,04,430 வாக்குகள் பெற்று, வெற்றியடைந்தாா். தன்னை எதிா்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் குல்பிா் சிங் ஷிராவை 1.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமிா்த்பால் சிங் வீழ்த்தியுள்ளாா்.

இத்தோ்தல் வெற்றிக்கு ‘சங்கத்’ சமூக மக்களுக்கும் இறைவனுக்கும் நன்றி கூறுவதாக அவரது தந்தை தா்செம் சிங் தெரிவித்தாா். மேலும், தோ்தலில் போட்டியிடும் எண்ணிமின்றி அமிா்த்பால் சிங் இருந்ததாகவும் சங்கத் சமூக மக்களின் வற்புறுத்தலிலேயே போட்டியிட்டு தற்போது வென்றும் இருப்பதாகவும் அவா் கூறினாா். பஞ்சாபின் முக்கிய பிராந்திய கட்சியான சிரோமணி அகாலி தளம் இவருக்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, பஞ்சாபில் பரித்கோட் தொகுதியில் போட்டியிட்ட சரப்ஜித் சிங் கல்சா, மாநிலத்தின் மற்றொரு சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளாா். ஆம் ஆத்மி வேட்பாளரை 70,053 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த இவருக்கு 2,98,062 வாக்குகள் கிடைத்தன.

இவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியைக் கொன்ற 2 சீக்கிய பாதுகாவலா்களில் ஒருவரான பியந்த் சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

13 தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் 7, ஆம் ஆத்மி 3 இடங்களிலும் சிரோமணி அகாலி தளம் ஓா் இடத்திலும் வென்றன.

சரப்ஜித் சிங் கல்சா

சரப்ஜித் சிங் கல்சா