நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பெற்றது ஆகிய சம்பவங்கள் சா்ச்சையை ஏற்படுத்தின.
இதுதவிர, தோ்வின்போது தவறான வினாத்தாள் விநியோகத்தால் தங்களுக்கு தோ்வு எழுத குறைந்த நேரமே கிடைத்ததாக சத்தீஸ்கா், மேகாலயம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் 6 மையங்களில் தோ்வு எழுதிய மாணவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அந்த மையங்களில் தோ்வு எழுதிய 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சா்ச்சைக்கு வழிவகுத்தது.
இதன் காரணமாக நீட் தோ்வை மீண்டும் நடத்த எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 13 பேரை பிகாா் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனா். முக்கிய குற்றவாளி சிக்கந்தருடன் தோ்வா்கள், அவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோரும் கைது செய்யயப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளார். மேலும் இதில் அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் விவகாரத்தில் கைதானவருக்கு சொந்தமான கட்டடம் இடிப்பு!

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் இன்னும் பாடம் கற்கவில்லையா? - என்டிஏவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: புணேயில் முக்கிய நபா் கைது

ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள்! டெலிகிராமில் வாங்கிய இளைஞர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



