கேரளத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து மலப்புரம் மாவட்டத்துக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையும், ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் நாளை(ஜூன் 23)ல் கோழிக்கோடு மற்றும் வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கையின்போது அடுத்த 24 மணி நேரத்தில் 20 செ.மீட்டருக்கு மேல் கனமழை முதல் மிக கனமழை பதிவாகும்.
மேலும், கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கையில் 11 முதல் 20 வரையிலான கனமழை பதிவாகும்.
மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை ஐம்டி வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை

நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!
இன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




