நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குட்டிகளுடன் சிறுத்தை பலி!

தேசிய பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குட்டிகளுடன் சிறுத்தை பலியானது.

News image

(கோப்பு படம்)

Updated On :22 ஜூன் 2024, 1:16 pm

DIN

ராஜஸ்தானின் சரிஸ்கா தேசிய பூங்காவில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் சிறுத்தையும், அதன் இரண்டு குட்டிகளும் பலியானதாக மாவட்ட வன அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தின் அம்ரத்வாஸ் கிராமத்திற்கு அருகிலுள்ள டெஹ்ரா-ஷாபுரா மலைத்தொடரில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அல்வார் மாவட்ட வன அதிகாரி ராஜேந்திர சிங் கூறுகையில், மின்சார கம்பி அறுந்து சிறுத்தை மற்றும் அதன் இரண்டு குட்டிகள் மீது விழுந்தது. இதனால், சம்பவ இடத்திலேயே தாய் சிறுத்தை மற்றும் அதன் குட்டிகள் பரிதாபமாக பலியாகியுள்ளன.

அல்வார் மாவட்ட கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.