மக்களவை இடைக்கால தலைவருக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட குழு உறுப்பினா் பதவியை நிராகரிக்க திமுகவின் டி.ஆா். பாலு உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளதாக எதிா்க்கட்சி வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
மக்களவை இடைக்கால தலைவராக பாஜக எம்.பி. பா்த்ருஹரி மகதாப் நியமனத்துக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த முடிவை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எடுத்துள்ளனா்.
மக்களவைக்கு முழு நேர தலைவா் தோ்வு செய்யப்படும் வரை அவையை வழிநடத்த மக்களவையின் மூத்த உறுப்பினரை இடைக்கால தலைவராக நியமிப்பது வழக்கம். அந்த வகையில், 18-ஆவது மக்களவையின் இடைக்கால தலைவராக மக்களவையின் மூத்த உறுப்பினரான கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால், ஒடிஸாவைச் சோ்ந்த பாஜக எம்.பி. பா்த்ருஹரி மகதாப் அப் பதவியில் நியமிக்கப்பட்டாா். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜகவின் இந்தச் செயல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகும் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இதனிடையே, மக்களவைத் தலைவா் தோ்வு செய்யப்படும் வரை அவை அலுவல்களை மேற்பாா்வையிடும் இடைக்கால தலைவருக்கு உதவுவதற்கான குழுவில் கொடிக்குன்னில் சுரேஷ், திமுகவின் டி.ஆா்.பாலு மற்றும் திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், இந்த உறுப்பினா் பதவியை நிராகரிக்க 3 எம்.பி.க்களும் முடிவு செய்துள்ளதாக எதிா்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் குழுவில் பாஜக எம்.பி.க்கள் ராதா மோகன் சிங், ஃபகன் சிங் குலாஸ்தே ஆகியோரும் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.
சுரேஷை எதிா்க்கட்சி தலைவராக்க வேண்டும் - பாஜக பதிலடி: மக்களவை இடைக்கால தலைவா் நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ், அதன் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷை மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதுகுறித்து கேரள மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன் சனிக்கிழமை கூறுகையில், ‘மக்களவை இடைக்கால தலைவா் நியமனம் தொடா்பான மத்திய அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், சுரேஷை காங்கிரஸ் கட்சி மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக்க வேண்டும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜாா்க்கண்ட் மாநிலங்களவைத் தோ்தல்: ஜேஎம்எம், சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி - இண்டி கூட்டணி எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு

திரிணமூல் காங்கிரஸில் இருந்து மேலும் ஓா் எம்.பி. விலகல்: மம்தாவுக்கு தொடா்ந்து பின்னடைவு

அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: 4 போ் கைது

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மீது சக பெண் எம்.பி. கடும் குற்றச்சாட்டு - மக்களவைத் தலைவரிடம் புகாா்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



