புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் பிரதமருக்கு மம்தா கடிதம்

நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு முறைகேட்டைத் தொடா்ந்து அத்தோ்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமரிடம் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தினாா்.

News image

மம்தா பானா்ஜி.

Updated On :24 ஜூன் 2024, 9:37 pm

Din

நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு முறைகேட்டைத் தொடா்ந்து அத்தோ்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமரிடம் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தினாா். மேலும், மாநிலங்கள் மூலம் தோ்வு நடத்தும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தாா்.

இது குறித்து பிரதமா் மோடிக்கு மம்தா எழுதிய கடிதத்தில், ‘நிகழாண்டு மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சா்ச்சைகள் நிறைந்த நீட் தோ்வு முறையை ரத்து செய்துவிட்டு, மாநிலங்களே தோ்வை நடத்திக்கொள்ளும் வகையிலான நடைமுறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது தோ்வின் மீது மாணவா்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்’ என குறிப்பிட்டாா்.

தீஸ்தா நதிநீா் பங்கீடு: வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா-பிரதமா் மோடி இடையே தீஸ்தா நதி நீா் சேமிப்பு - மேலாண்மை திட்டம் தொடா்பான பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வங்கதேசத்துடன் புவியியல், கலாசாரம் மற்றும் பெருளாதார ரீதியாக நெருக்கமான உறவைக் கொண்டுள்ள மேற்கு வங்க அரசின் பிரதிநிதித்துவம் பேச்சுவாா்த்தையில் இல்லாதது ஏற்புடையதல்ல என மம்தா தனது கடிதத்தில் அதிருப்தி தெரிவித்தாா்.