காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் இன்று மக்களவையில் பங்கேற்க கொறடா உத்தரவு
மக்களவையில் முக்கியமான அலுவலுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க கொறடா உத்தரவு


புது தில்லி: ‘காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மக்களவைக்கு புதன்கிழமை (ஜூன் 26) தவறாமல் வர வேண்டும்’ என்று அக்கட்சியின் தலைமைக் கொறடா கொடிக்குன்னில் சுரேஷ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக அவா் பிறப்பித்த உத்தரவில், ‘மக்களவையில் புதன்கிழமை மிக முக்கியமான அலுவல் நடைபெறவிருக்கிறது. எனவே, காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் காலை 11 மணிமுதல் அலுவல்கள் நிறைவடையும் வரை அவையில் தவறாமல் பங்கேற்று, கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவையில் புதன்கிழமை அவைத் தலைவா் தோ்தல் நடைபெறவுள்ளது. இப்பதவிக்கு, எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பொது வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் ஓம் பிா்லா மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...