எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மீண்டும் தேசியவாத காங்கிரஸில் இணைந்த பா.ஜ.க. தலைவர்!

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் சூரியகாந்த பாட்டீல்.

News image
சூரியகாந்த பாட்டீல்.- படம் | சூரியகாந்த பாட்டீல் எக்ஸ் தளப் பதிவு
Updated On :25 ஜூன் 2024, 11:29 am

DIN

2014 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த எழுத்தாளரும், அரசியல்வாதியுமான சூரியகாந்த ஜெய்வந்தராவ் பாட்டீல், பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸில் இணைந்துள்ளார்.

75 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் சூரியகாந்த பாட்டீல் தேசியவாத காங்கிரஸில் இணைந்ததற்கு அக்கட்சியின் தலைவர் சரத்பவார், மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் மூத்த தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சரத் பவார் கூறுகையில், “சூரியகாந்தாவின் வருகை நந்தேட், ஹின்ஹூலி, பர்பானி, பீட் ஆகிய மாவட்டங்களில் கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.

இவரின் மந்தமான செயல்பாடுகளால் மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், ஜூன் 22 ஆம் தேதி பாஜகவில் இருந்து அதிகாரபூர்வமாக விலகினார்.

முதலில் காங்கிரஸிலும், பின்னர் ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸிலும் இருந்த சூரியகாந்த பாட்டீல் 2014-ல் பாஜகவில் இணைந்தார். 2024 இல் ஹிங்ஹூலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்தார். ஆனால், அந்தத் தொகுதி கூட்டணிக் கட்சியான சிவசேனைக்கு ஒதுக்கப்பட்டது.

அந்தத் தேர்தலில் சிவசேனை (உத்தவ் அணி) சார்பில் போட்டியிட்ட நாகேஸ் பாபுராவ், சிவசேனையின் பாபு ராவ் ஹோகாலிகரை 1.08 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

சூரியகாந்த பாட்டீலின் வருகை, அக்டோபரில் நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற, மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.