நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கே.சி. வேணுகோபால் அறிவித்தார்.

News image

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி

Updated On :25 ஜூன் 2024, 10:09 pm IST

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (ஜூன் 26) அறிவித்தார்.

மக்களவைத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனையின் முடிவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் கே.சி. வேணுகோபால்

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் கே.சி. வேணுகோபால் - ஏஎன்ஐ

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, இடைக்கால மக்களவைத் தலைவர் பா்த்ருஹரி மகதாப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். மற்ற நிர்வாகிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்து ரேபரேலி தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

மக்களவையில் இன்று உறுப்பினராகவும் முறைப்படி ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.

மக்களவையில் பொறுப்பேற்ற ராகுல் காந்தி

மக்களவையில் பொறுப்பேற்ற ராகுல் காந்தி - பிடிஐ

மக்களவைத் தேர்தலில் 234 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தனித்து 99 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வாகியுள்ள ராகுல் காந்தி தேசத்தின் குரலாக ஒலிப்பார் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சரவை பதவிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.