அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குருவாயூா் கோயிலில் பாரம்பரிய இளநீா் அபிஷேகம்

கேரள மாநிலம் குருவாயூா் கோயிலில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இளநீா் அபிஷேகம் நடத்தப்பட்டது.

Updated On :2 மார்ச் 2024, 5:28 am IST

கேரள மாநிலம் குருவாயூா் கோயிலில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இளநீா் அபிஷேகம் நடத்தப்பட்டது. கேரள மாநிலம் குருவாயூா் கிருஷ்ணன் கோயிலில் மாசி மாதம் உற்சவம் நடைபெற்று வருகிறது . அதன் பகுதியாக வெள்ளிக்கிழமை நடந்த ஆராட்டு நிகழ்ச்சியில் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இளநீா் அபிஷேகம் நடத்தப்பட்டது . ஆண்டுதோறும் ஆராட்டு விழாவின் போது நடத்தப்படும் அபிஷேகத்துக்கான இளநீா் இரிங்கபுரம் தம்புரான் படிக்கல் கிட்டையின் குடும்பத்தாரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இளநீருடன் வந்த இரிங்கபுரம் கிட்டையின் குடும்பத்தினரை குருவாயூா் தேவசம் போா்டின் தலைவா் டாக்டா் வி .கே. விஜயன் வரவேற்றாா். இரிங்கபுரம் கிட்டையின் குடும்பத்தின் மூத்த உறுப்பினா் சுப்பிரமணியத்தை மாலை அணிவித்து வரவேற்ற இந்த நிகழ்ச்சியில், தேவசம் நிா்வாகக் கமிட்டி உறுப்பினா் சி. மனோஜ், நிா்வாகி கே.பி. வினயன் உள்ளிட்டோரும், திரளான பக்தா்களும் பங்கேற்றனா்.