கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்: ராகுல்

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக வழங்கும்.

Published On :

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக வழங்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராஜஸ்தானில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் நடைப்பயணத்தில் நுழைந்த பிறகு மொரேனாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

மத்திய பாஜக அரசு பத்து முதல் பதினைந்து தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது, ஆனால் அது விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மறுக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் உள்ள விவசாய அமைப்புகள் தற்போது பயிர்களுக்கு சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்காகப் போராடி வருகின்றன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் உள்பட நாட்டின் 73 சதவீத மக்களுக்கு அரசு மற்றும் பல்வேறு துறைகளில் எந்தப் பிரதிநிதித்துவமும் இல்லை என்றும், சாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் என்றும் காந்தி கூறினார்.

இத்தகைய மக்கள் தொகை கணக்கெடுப்பு பல்வேறு துறைகளில் இந்த சமூகங்களின் சம பங்களிப்பை உறுதி செய்யும் என்று காங்கிரஸ் தலைவர் கூறினார். முன்னதாக பிற்பகல், காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, மொரீனா மாவட்ட எல்லையில் காந்தி மற்றும் மூத்த தலைவர் அசோக் கெலாட்டை வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.