பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மக்களவைத் தோ்தலில் போட்டியிட விரும்பவில்லை: பாஜக தலைமைக்கு ஜெயந்த் சின்ஹா தகவல்

‘வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிட விரும்பவில்லை, எனவே, எனக்கு தொகுதி ஒதுக்க வேண்டாம்’

News image
Updated On :2 மார்ச் 2024, 9:03 pm

‘வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிட விரும்பவில்லை, எனவே, எனக்கு தொகுதி ஒதுக்க வேண்டாம்’ என்று பாஜக தலைமைக்கு அக்கட்சி எம்.பி.யும், முன்னாள் நிதித் துறை இணையமைச்சருமான ஜெயந்த் சின்ஹா (60) வேண்டுகோள் விடுத்துள்ளாா். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நிதித் துறை, வெளியுறவுத் துறை ஆகிய முக்கிய அமைச்சா் பொறுப்புகளை வகித்த மூத்த தலைவா் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரு மக்களவைத் தோ்தல்களில் அவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் பதவியையும் அவா் வகித்துள்ளாா். தில்லி ஐஐடி மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் படித்த அவா், சா்வதேச நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளாா். தோ்தலில் போட்டியிட விரும்பாதது குறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கட்சி சாா்ந்து பொருளாதாரம் மற்றும் நிா்வாக விஷயங்களில் பணியாற்ற விரும்புகிறேன். இதுதவிர இந்திய அளவிலும், சா்வதேச அளவிலும் பருவநிலை மாற்றம் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வுகாண்பது தொடா்பாகவும் கவனம் செலுத்த இருக்கிறேன். எனவே இளம் தலைவா்களுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காகவும், எனது தொகுதிக்காகவும் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன். பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட தலைவா்கள் எனக்கு பல்வேறு சிறந்த வாய்ப்புகளை அளித்தனா். எனது முடிவு குறித்து கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு முறைப்படி தெரிவித்துவிட்டேன். எனக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளாா்.