தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது: குண்டுவெடிப்பு குறித்து கர்நாடக அமைச்சர்

தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று குண்டுவெடிப்பு குறித்து கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
B’luru
B’luru
Published on
Updated on
1 min read

காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு முக்கிய ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக பதிவாக சிசிடிவி காட்சிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் பதிவான காட்சிகளையும் கொண்டு குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இன்று மதியம், முதல்வர் சித்தராமையா தலைமையில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அப்போது, விசாரணை மற்றும் அடுத்தகட்ட விசாரணை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பல்வேறு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள உணவகத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் குண்டு வெடித்தது. இதில், 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

முதலில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததாகக் கூறப்பட்ட நிலையில், அங்கு சுமார் 30 வயதான மர்ம நபர் வைத்துச் சென்ற பையில் இருந்த டைமர் வெடிகுண்டு வெடித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), வெடிமருந்து பொருள்கள் சட்டத்தின் கீழ் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com