நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய் பாதிப்பு!

ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்பட்ட அன்று புற்றுநோய் உறுதி செய்யப்பட்டதாக சோம்நாத் தகவல்.

News image

இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்

Updated On :4 மார்ச் 2024, 4:05 pm IST

இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்துக்கு இரைப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்திய தினத்தன்று இரைப்பை புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பேட்டி ஒன்றில் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்திய அன்று புற்றுநோய்க்கான சில அறிகுறிகள் தென்பட்டன. அப்போது அதுபற்றி சரியாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்த முழு புரிதல் எனக்கு இல்லை.

மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி, ஸ்கேன் செய்தேன். ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்திய அன்று இரைப்பையில் புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி எனக்கு மட்டுமின்றி, எனது குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, கீமோதெரபி அறுவை சிகிச்சை மூலம் சோம்நாத் வயிற்றில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

தற்போது புற்றுநோயில் இருந்து முழுவதுமாக குணமடைந்து பணியை தொடர்வதாகவும், வழக்கமான பரிசோதனைக்கு மருத்துவமனை சென்று வருவதாகவும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.