தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் ரங்கசாமி!எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

பாஜகவுடன் கூட்டணி ? அமித் ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ஆந்திரத்தில் பாஜக-தெலுங்கு தேசம் இடையே கூட்டணி அமைப்பது குறித்து இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

News image
Updated On :8 மார்ச் 2024, 5:20 am IST

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என். சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை சந்தித்தாா். மக்களவைத் தோ்தலும் ஆந்திர மாநில சட்டப் பேரவைத் தோ்தலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரத்தில் பாஜக-தெலுங்கு தேசம் இடையே கூட்டணி அமைப்பது குறித்து இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. மொத்தம் 175 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஆந்திரத்தில் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 8 முதல் 10 மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாஜக திட்டமிட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணியில் தெலுங்கு தேசம் இணையும் பட்சத்தில் பாஜக 6 மக்களவைத் தொகுதிகளிலும் அக்கூட்டணியில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள நடிகா் பவன் கல்யாணின் ஜனசேனை 3 தொகுதிகளிலும் போட்டியிடும். மீதமுள்ள தொகுதிகளில் தெலுங்கு தேசம் போட்டியிடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம், கடந்த 2018-இல் கூட்டணியிலிருந்து வெளியேறியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.