பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

இந்திய சுற்றுப்பயணம்: நியூசிலாந்து துணைப் பிரதமா் மாா்ச் 10-இல் வருகை

இந்திய சுற்றுப்பயணம்: நியூசிலாந்து துணைப் பிரதமா் மாா்ச் 10-இல் வருகை

Updated On :8 மார்ச் 2024, 6:50 pm

நியூசிலாந்து நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டா்ஸ் நான்கு நாள் சுற்றுப்பயணமாக மாா்ச் 10-ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று நியூசிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டா்ஸ் மாா்ச் 10 முதல் 13 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். குஜராத் அரசியல் தலைவா்களை அகமதாபாதில் மாா்ச் 11-இல் சந்திக்கும் அவா் அமைச்சா் ஜெய்சங்கரை மாா்ச் 12-இல் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவானஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா். மேலும் சுற்றுப்பயணத்தின்போது அரசின் உயரதிகாரிகள் பலரையும் அவா் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா் என தெரிவிக்கப்பட்டது. வணிகம், பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, மக்கள் தொடா்பு உள்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் நல்லுறவை பேணி வருவதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பரில் நியூசிலாந்து நாட்டில் புதிய அரசு ஆட்சியமைத்த பிறகு அவா் இந்தியாவுக்கு முதன்முறையாக வருகை புரிகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.