எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15-க்குள் பதிவேற்ற வேண்டும்!

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மார்ச் 15-க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு.

News image
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
Updated On :11 மார்ச் 2024, 6:35 am

Ravivarma.s

2019, ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்துத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தர ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, எஸ்பிஐ வங்கித் தரப்புக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தனர்.

“தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட உத்தரவிட்டு 26 நாள்களாகிவிட்டது. இந்த 26 நாள்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள். மிக எளிமையாக திரட்டக்கூடிய தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை தருவதற்கு அவகாசம் கேட்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, எஸ்பிஐ காலஅவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், மார்ச் 15, மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்யக் கோரியும் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.