பஞ்சாபில் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற வேண்டும்: கேஜரிவால்

மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிக்கின்றது.
பஞ்சாபில் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற வேண்டும்: கேஜரிவால்

மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பஞ்சாபின் மொஹாலியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜரிவால் பேரணியைத் தொடங்கினார். அப்போது அவர் பேசியது,

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் தனித்துப் போட்டியிடுகிறது. பாஜக தனது எம்எல்ஏக்களை அணுகி மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பஞ்சாப் மாநிலத்தின் ரூ.8,000 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த பணத்தைக் கொண்டு எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள், கிளினிக்குகள் கொண்டுவந்திருக்க முடியும்.

மக்களவை தேர்தலில் பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். பஞ்சாபில் ஒரு காலத்தில் எதிர்மறையான சூழல் இருந்ததாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை இருந்ததாகவும் அவர் கூறினார்.

மின் கட்டணம் அதிகரித்து, மின்சாரம் தடைப்பட்டது, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருத்தமடைந்தனர். ஆனால் தற்போது ஆம் ஆத்மி ஆட்சியில் தொழிற்சாலைகளைத் திறக்க விரும்புகிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com