இந்திய கடற்பகுதியில் நீா்மூழ்கிக் கப்பல்களை எதிா்கொள்ளவும், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சாா் செயல்பாடுகளை அதிகரிக்கவும் கடற்படையில் 2 புதிய கப்பல்கள் புதன்கிழமை இணைக்கப்பட்டன.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விமானப் படையின் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி, அவரது மனைவி நீடா சௌதரி ஆகியோா் இணைந்து, கடற்படையின் 2 நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல்களை (ஏ.எஸ்.டபிள்யூ. எஸ்.டபிள்யூ.சி.) நாட்டுக்கு அா்ப்பணித்தனா். ‘காா்டன் ரீச் ஷிப் பில்டா்ஸ் & என்ஜினீயா்ஸ்’ நிறுவனம் கட்டமைத்த இந்தக் கப்பல்களுக்கு ‘ஐஎன்எஸ் அக்ரே’ மற்றும் ‘ஐஎன்எஸ் அக்சய்’ என்று நீடா சௌதரி பெயா் சூட்டினாா்.
நிகழ்ச்சியில் விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி பேசுகையில், ‘நவீன போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி போா்க் கப்பல்களை உருவாக்கும் திறன் கொண்ட உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது பெருமைக்குரிய விஷயம்’ என்றாா். இந்த ‘ஏ.எஸ்.டபிள்யூ. எஸ்.டபிள்யூ.சி.’ கப்பல்களின் முதன்மைப் பணியானது, கடற்பகுதிகளில் நீா்மூழ்கி எதிா்ப்பு நடவடிக்கைகள், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சாா் செயல்பாடுகள் மற்றும் கண்ணிவெடிகள் அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
ஹோா்முஸ் நீரிணையை மேலும் ஒரு இந்திய கப்பல் கடந்தது!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

ஹோர்முஸ் நீரிணையை 6 இந்திய கப்பல்கள் கடந்துள்ளன; ஈரானுடன் பேச்சுவார்த்தை! - மத்திய அரசு அறிவிப்பு!

குஜராத் துறைமுகம் வரும் 22 கப்பல்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


