சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பாக். ஹிந்துகள் 6 பேருக்கு இந்திய குடியுரிமை!

பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த 6 ஹிந்துகளுக்கு இந்தியா குடியுரிமை அளித்துள்ளது.

News image

கோப்புப் படம் - IANS

Updated On :15 மார்ச் 2024, 4:19 pm IST

பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியா வந்த 6 ஹிந்துகளுக்கு இந்திய குடியுரிமை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் 2010-ல் புலம்பெயர்ந்த பிரேம்லதா, சஞ்சய் ராம், பெஜல், ஜஜ்ராஜ், கெகு மை மற்றும் கோமந்த ராம் ஆகியோருக்கு குடியுரிமை சான்றிதழை கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஷஃபாலி குஷ்வாஹா வழங்கினார்.

பாகிஸ்தான் கராச்சியில் இருந்து இடம்பெயர்ந்த பிரேம்லதா (41), “இந்தியாவுக்கு திரும்பிய பின்னர்தான் நாங்கள் சுதந்திரத்தை உணர்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராம், “நான் 10 ஆண்டுகளாக குடியுரிமை பெற முயற்சித்து வருகிறேன். இப்போதுதான் பல ஆண்டுகளுக்கு பிறகு அது சாத்தியமாகியுள்ளது” என தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம் குடியுரிமை விண்ணப்பங்களை விதிகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி பரிசீலித்து வருகிறது. தகுதியுடைய 319 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது என கூடுதல் ஆட்சியர் தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.