எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தேர்தலை எதிர்கொள்ள பாஜக கூட்டணி தயார்: பிரதமர் மோடி

News image
Updated On :16 மார்ச் 2024, 2:11 pm

DIN

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக கூட்டணி தயாராகவிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நடப்பு 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16-ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்கு முன்பாக, 18-ஆவது மக்களவை தோ்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தோ்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்டது.

இந்த நிலையில் தில்லியில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மக்களவைத் தோ்தல் மற்றும் 4 மாநில பேரவைத் தோ்தல்களுக்கான அட்டவணை மற்றும் தமிழ்நாட்டில் விளவங்கோடு பேரவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.

அதன்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக கூட்டணி தயாராகவிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட பாஜக-தேசிய ஜனநாயக் கூட்டணி முழுமையாக தயாராக உள்ளது. 140 கோடி இந்தியர்களால் இயக்கப்படும் நமது நாடு வளர்ச்சியில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளோம், கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் இருந்து விடுவித்துள்ளோம்.

எங்களின் திட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைந்துள்ளன. 140 கோடி மக்கள் மற்றும் 96 கோடி வாக்காளர்களின் முழு அன்பையும், ஆசிகளையும் தொடர்ந்து 3வது முறையாக பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.