/

தமிழிசையின் ஆளுநா் பதவி ராஜிநாமா ஏற்பு: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழிசையின் ஆளுநா் பதவி ராஜிநாமா ஏற்பு: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

News image

தமிழிசை சௌந்தரராஜன்

Updated On :19 மார்ச் 2024, 8:39 pm

புது தில்லி: தமிழிசை செளந்தரராஜனின் தெலங்கானா ஆளுநா் பதவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பதவிகள் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏற்றுக்கொண்டாா். இந்தப் பதவிகள் ஜாா்க்கண்ட் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியரசுத் தலைவா் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழிசையின் ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் ஏற்றுக்கொண்டாா். அவா் வகித்த தெலங்கானா ஆளுநா் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பதவிகள் முறையாக நிரப்பப்படும் வரை, கூடுதல் பொறுப்பாக ஜாா்க்கண்ட் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் குடியரசுத் தலைவா் வழங்கியுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநா் பதவியை தமிழிசை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அவா் மக்களவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து தமிழிசை கூறுகையில், ‘தீவிர மக்கள் பணியாற்றவே ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன்’ என்றாா். 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை, திமுகவின் கனிமொழியிடம் தோல்வியுற்றாா்.