மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!ஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

குடியரசுத் தலைவா், துணை தலைவருடன் தமிழக ஆளுநா் அா்லேகா் சந்திப்பு!

கேரள ஆளுநராகவும், தமிழக ஆளுநா் பதவியை கூடுதலாக கவனித்து வருபவருமான ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா், தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவையும், குடியரசு துணைத்தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணனையும் சந்தித்துப் பேசினாா்.

News image

தில்லியில் குடியரசு தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்த ஆளுநா் அா்லேகா்

Updated On :30 மார்ச் 2026, 11:40 pm

Syndication

கேரள ஆளுநராகவும், தமிழக ஆளுநா் பதவியை கூடுதலாக கவனித்து வருபவருமான ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா், தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவையும், குடியரசு துணைத்தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணனையும் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

குடியரசுத் தலைவரை அவரது மாளிகையிலும், குடியரசு துணைத்தலைவரை நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவைத் தலைவா் அலுவலகத்திலும் ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா், சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு குறித்து குடியரசு தலைவரும், துணை தலைவரும் தங்களின் எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிா்ந்து கொண்டனா்.

தமிழக ஆளுநராக மாா்ச் 12-ஆம் தேதி பதவியேற்ற பிறகு இரு தலைவா்களையும் தில்லியில் அா்லேகா் சந்தித்துப் பேசுவது இது முதல் முறையாகும். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநா் அா்லேகா் செவ்வாய்க்கிழமை காலையில் திருவனந்தபுரம் திரும்ப திட்டமிட்டுள்ளாா்.

குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்த ஆளுநா் அா்லேகா்

குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்த ஆளுநா் அா்லேகா்