தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

வால்மீகிநகர் புலிகள் காப்பகத்தில் ஆண் புலி உயிரிழப்பு!

வால்மீகிநகர் புலிகள் காப்பகத்தில் ஆண் புலி மர்ம மரணம்!

News image
Updated On :25 மார்ச் 2024, 10:31 pm IST

பாட்னா: பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள வால்மீகிநகர் புலிகள் காப்பகத்தில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

இந்தநிலையில் பெட்டியா பிரிவில் உள்ள மகுராகா வனப்பகுதியில் நாள்தோறும் அதிகாரிகள் ரோந்து சென்று, வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்து வரும் நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ரோந்து குழுவால் ஆண் புலியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து நாங்கள் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வால்மீகிநகர் புலிகள் காப்பகத்தின் இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர், மருத்துவர் நேஷமணி மற்றும் கோட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் பிரதியுமான் கெளரவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதனை அடுத்து இறந்த புலியின் உடலை அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தியுள்ளனர்.

சண்டை காரணமாக புலி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி ஒன்று உயிரிழந்திருப்பது வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன உயிர் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.