ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

முதுமலை புலிகள் காப்பக எல்லையில் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக எல்லையில் ஆண் யானை இறந்துகிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

News image

முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உயிரிழந்த யானை.

Updated On :18 ஜூன் 2026, 1:04 am IST

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக எல்லையில் ஆண் யானை இறந்துகிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அவரல்லா பீட் பகுதியிலுள்ள அவரல்லா காப்புக்காடு எல்லையில் வன ஊழியா்கள் ரோந்து சென்றபோது, ஆண் யானை இறந்துகிடந்தது தெரியவந்தது.

இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் யானையின் உடலை உடற்கூறாய்வு செய்து, உடலில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தாா். பின்னா் யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

இதில் உயிரிழந்தது 15 வயதுடைய ஆண் யானை என்றும், மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் ஆய்வகப் பரிசோதனைக்குப் பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.