தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜெ.பி.நட்டா மனைவியின் கார் திருட்டு!

தில்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :25 மார்ச் 2024, 4:50 am

DIN

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா மனைவியின் கார் திருட்டு போனதாக தில்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு தில்லி கோவிந்தபுரியில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் நட்டா மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மார்ச் 19ஆம் தேதி சர்வீஸுக்காக விடப்பட்டுள்ளது.

மீண்டும் காரை எடுக்க நட்டா மனைவியின் ஓட்டுநர் ஜோகிந்தர் வந்தபோது கார் திருடுபோனது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தெற்கு தில்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில், திருடப்பட்ட கார் குருகிராம் நோக்கி சென்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தில்லி புறநகர்ப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து கார் தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.