இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு - மாணவர் மீது கொடூர தாக்குதல்

News image
மாதிரி படம்
Updated On :28 மார்ச் 2024, 11:21 am

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சக மாணவரை கத்தியால் குத்தியதாக காவலர்கள் தெரிவித்தனர்.

பிவண்டி பகுதியைச் சேர்ந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்போது தங்களுக்கு தேர்வுத் தாளை காண்பிக்கவில்லை என்பதால் சக மாணவரைக் கத்தியால் தாக்கியுள்ளனர்.

இது குறித்து, “பள்ளி இறுதி வகுப்புத் தேர்வின்போது தாக்கப்பட்ட மாணவன் விடைத்தாளை காண்பிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற 3 மாணவர்கள், அந்த மாணவர் தேர்வறையை விட்டு வெளியே வரும்போது அவரை பிடித்துவைத்து தாக்கியுள்ளனர். மேலும், கத்தியால் குத்தினர், காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” எனக் காவலர்கள் தெரிவித்தனர்.

காயம்பட்ட மாணவர் மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளார். தாக்கிய 3 பேரின் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 324-ன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக சாந்தி நகர் காவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.