பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

மக்களவைத் தோ்தல்: ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத தலைவரின் சகோதரா் வேட்புமனு தாக்கல்

மக்களவைத் தோ்தல்: ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத தலைவரின் சகோதரா் வேட்புமனு தாக்கல்

News image
Updated On :3 மே 2024, 5:56 pm

Din

மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் நயீம் கானின் சகோதரா் முனீா் கான் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் தேசிய முன்னணி தலைவா் நயீம் கான் கைது செய்யப்பட்டாா். மேலும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீா் தேசிய முன்னணிக்கும் மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், நயீம் கானின் சகோதரரும், ஜம்மு-காஷ்மீா் தேசியவாத மக்கள் முன்னணி கட்சியைச் சோ்ந்தவருமான முனீா் கான், மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் போட்டியிடுகிறாா். இதையொட்டி அவா் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதைத்தொடா்ந்து முனீா் கான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒரு காலத்தில் குறிப்பிட்ட திசையை நோக்கி (தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை குறிப்பிட்டாா்) ஜம்மு-காஷ்மீா் சென்றது. தற்போது பிரிவினைவாதம் பேசும் காலம் மறைந்து இந்தியாவின் சூழல் மாறியுள்ளது. எனவே அனைவரும் தேசம் குறித்து சிந்திக்க வேண்டும் என்றாா்.

மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவருமான ஒமா் அப்துல்லா, மக்கள் மாநாட்டு கட்சித் தலைவா் சஜத் லோன் உள்ளிட்டோா் பாரமுல்லா தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.