‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கங்கனாவின் பெயர் குழப்பம்: தேஜஸ்வி சூர்யாவா, யாதவா?
பிரசாரத்தில் கங்கனா (கோப்புப் படம்)
பிரசாரத்தில் கங்கனா (கோப்புப் படம்)ANI
Published on
Updated on
1 min read

நடிகையும் சமீபத்தில் அரசியல்வாதியுமான கங்கனா ரணாவத், பெயர் குழப்பத்தால் எதிர்க்கட்சியை தாக்குவதற்கு பதிலாக தனது கட்சியின் கூட்டணி கட்சி உறுப்பினரைத் தாக்கிய சம்பவம் இணையத்தில் விவாத பொருளாகியுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் பிஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் பெயருக்குப் பதிலாக பெங்களூரு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவின் பெயரை மாற்றி குறிப்பிட்டுள்ளார் கங்கனா ரணாவத்.

பிரசாரத்தின்போது கங்கனா ரணாவத், “குட்டிச்சுவரான இளவரசர்களின் கட்சி ஒன்று உள்ளது.. அதில் உள்ள ராகுல் காந்தி நிலவில் உருளைக்கிழங்கு விவசாயம் செய்ய நினைப்பவர் அல்லது தேஜஸ்வி சூர்யா போக்கிரித்தனம் செய்துகொண்டு மீன் சாப்பிடுபவர்” எனப் பேசியுள்ளார்.

கங்கனா ரணாவத், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த விடியோவை பகிர்ந்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவ், “யார் இந்த பெண்” எனக் கேட்டுள்ளார்.

கங்கனா ரணாவத் மண்டி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் வாரிசு அரசியலில் வந்தவர்கள் என விமர்சித்து வருகிறார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அம்ரித் கவுர், முதலில் அவரது கட்சித் தலைவர்கள் குறித்து உண்மையை கங்கனா அறிந்து கொள்ளட்டும் எனவும் எந்த அடிப்படையில் மண்டி தொகுதியில் போட்டியிட அவர் தேர்வு செய்யப்பட்டார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com