வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

News image
Updated On :5 மே 2024, 6:25 am

சரயு நதிக்கரையில் உள்ள ராமர் கோயிலில் தீப ஆரத்தி எடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் நேற்று வழிபாடு மேற்கொண்டார்.

அப்போது, 500 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. பக்தியை வெளிப்படுத்த இங்கு வந்துள்ளேன். ராமர் கோயில் நமது நம்பிக்கையின் அடையாளம். ஏராளமாவனவர்கள் இங்கு வருவதில் மகிழ்ச்சி என்றார். மேலும் ஆளுநர் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ஹனுமான் கோயிலில் பகவான் ஹனுமனையும் தரிசனம் செய்தனர்.

மக்கள் நலம் மற்றும் வளம் பெறவும், இந்தியாவின் முன்னேற்றத்துக்காகவும் ஆளுநர் பிரார்த்தனை செய்ததாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்திக்கு புதன்கிழமை பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ஸ்ரீராமா் கோயிலில் வழிபாடு நடத்தினாா்.

இக்கோயிலில் மூலவா் ஸ்ரீ பாலராமா் பிராண பிரதிஷ்டை விழா, பிரதமா் மோடி முன்னிலையில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.