அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு


சரயு நதிக்கரையில் உள்ள ராமர் கோயிலில் தீப ஆரத்தி எடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் நேற்று வழிபாடு மேற்கொண்டார்.
அப்போது, 500 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. பக்தியை வெளிப்படுத்த இங்கு வந்துள்ளேன். ராமர் கோயில் நமது நம்பிக்கையின் அடையாளம். ஏராளமாவனவர்கள் இங்கு வருவதில் மகிழ்ச்சி என்றார். மேலும் ஆளுநர் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ஹனுமான் கோயிலில் பகவான் ஹனுமனையும் தரிசனம் செய்தனர்.
மக்கள் நலம் மற்றும் வளம் பெறவும், இந்தியாவின் முன்னேற்றத்துக்காகவும் ஆளுநர் பிரார்த்தனை செய்ததாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்திக்கு புதன்கிழமை பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ஸ்ரீராமா் கோயிலில் வழிபாடு நடத்தினாா்.
இக்கோயிலில் மூலவா் ஸ்ரீ பாலராமா் பிராண பிரதிஷ்டை விழா, பிரதமா் மோடி முன்னிலையில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...