திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் கோயில் நடை மே 10-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

News image
Updated On :6 மே 2024, 12:04 pm IST

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் கோயில் நடை மே 10-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனைத் தரிசித்துச் செல்கின்றனர்.

இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், மே மாதம் 10-ம் தேதி காலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோயில்ர குழுத் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கேதார்நாத் கோயில் திறக்கப்படவுள்ளதையடுத்து அதற்கான சிறப்புப் பூஜை வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. கடந்தாண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.