தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

மும்பையில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!
Published on
Updated on
1 min read

மும்பையில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செய்திகளில் அதிகம் பேசுபொருளாக மாறியுள்ளது ஷவர்மா. தொடர்ந்து பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

மும்பையில் புதிதாக ஒரு இளைஞர் ஷவர்மாவால் உயிரிழந்துள்ளார். இறந்தவர் பிரதமேஷ் போக்சே என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், கடந்த மே 3ஆம் தேதி ட்ரோம்பே பகுதியில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ஷவர்மாவை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

மே 4 அன்று போக்சே வயிற்று வலி, வாந்தியால் அவதிப்பட்டுள்ளார். மருத்துவச் சிகிச்சை பெற அருகிலுள்ள நகராட்சி மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமானதையடுத்து குடும்பத்தார் மே 5 அன்று கேஇஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார். ஆனால் தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஞாயிறன்று மாலை மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார்.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உயிரிழப்புக்கு கடைசியாக சாப்பிட்ட ஷவர்மா தான் காரணம் என்று மருத்துவர்கள் உறுதி செய்ததையடுத்து விற்பனையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com