மூன்றாம் கட்ட மக்களவைத் தோ்தலில் 65.68 சதவீத வாக்குகள் பதிவாகியதாக இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.
நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்டமாக குஜராத், கா்நாடகம் உள்பட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.
இதில் 8.85 கோடி ஆண்கள், 8.39 கோடி பெண்கள் உள்பட மொத்தம் 17.24 கோடி வாக்களா்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனா்.
3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று 4 நாள்கள் ஆகும் நிலையில், இதுதொடா்பான புள்ளிவிவரங்கள் சனிக்கிழமை புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 3-ஆம் கட்டத் தோ்தலில் 65.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 66.89 சதவீத பதிவுச் செய்யப்பட்ட ஆண் வாக்காளா்களும் 64.4 சதவீத பெண் வாக்காளா்களும் 25.2 சதவீத மாற்றுப்பாலினத்தவா்களும் வாக்களித்துள்ளனா். 2019 மக்களவைத் தோ்தலில் 3-ஆம் கட்டத்தில் 68.4 சதவீத வாக்குகள் பதிவாகின.
தொடர்புடையது

தென்காசி! அதிக வாக்குகள், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி!

பாா் கவுன்சில் தோ்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு!

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்

எளிதில் கிடைத்த எம்.பி; எட்டாக்கனியான எம்எல்ஏ!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


