டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரோனா தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து ரூ.52 கோடி நன்கொடை பெற்ற மோடி: பிரியங்கா

கரோனா தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து ரூ.52 கோடி நன்கொடை பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

News image
பிரியங்கா காந்தி- -
Updated On :22 மே 2024, 12:17 pm

DIN

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்தது. ஆனால் அது தற்போது நீக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து மோடி ரூ.52 கோடி நன்கொடையாகப் பெற்றக் கொண்டார் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் கொட்டா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரியங்கா காந்தி, நீங்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டீர்களா? நானும் செலுத்திக்கொண்டேன், எனக்கு முதலில் அதில் விருப்பமில்லை, ஆனால், தற்போதுதான், அந்த தடுப்பூசியில் பிரச்னை இருப்பதாகவும், அதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பல இளைஞர்கள், உடல்நலத்துடன் இருந்தவர்கள் எல்லாம் மரணமடைந்துள்ளனர். இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக வெளிநாடுகளில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உங்களுக்கு நினைவிருக்கிறதா? கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்தது. ஆனால் அது தற்போது நீக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து மோடி ரூ.52 கோடி நன்கொடையாகப் பெற்றக் கொண்டார் என்றும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலை உறுதித் திட்டத்தை காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்தது. முதலில் கிராமப்புறங்களில் மட்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் பிறகு நகர்ப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

நகரங்களிலும், ஒரு மனிதன் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வாய்ப்புப் பெறுவது அவர்களது உரிமை என்ற அடிப்படையில் அந்த திட்டம் நகரங்களுக்கும் கொண்டுவரப்பட்டது.

ஆனால், இந்த ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிடிக்கவில்லை. நாடாளுமன்றத்தில், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு எதிராக அவர் பேசிய விடியோவை வேண்டுமானாலும் நீங்கள் கேட்டுப்பார்க்கலாம்.

அவர் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை முடக்கவே நினைத்தார். பிறகுதான் அவருக்குத் தெரிய வந்தது, மக்கள் இந்த திட்டம் முடக்கப்படுவதை விரும்பவில்லை என்பது. எனவே அதனை முடக்காமல், அவரது ஆட்சிக்காலத்தில் படிப்படியாக ஊரக வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்திவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.