மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் பேரவைத் தேர்தல் நடத்த ஏற்பாடு: ராஜீவ் குமார்

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் பேரவைத் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார் தலைமை தேர்தல் ஆணையர்

News image

Manvender Vashist Lav

Updated On :25 மே 2024, 10:59 am

ஜம்மு - காஷ்மீரில் விரைவில் பேரவைத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று மக்களவைத் தேர்லின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவின்போது, இன்று காலை வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

மக்களவைத் தேர்தலின்போது, ஜம்மு - காஷ்மீரில் பதிவான வாக்குகள் உற்சாகத்தை அளிக்கின்றன. எனவே, மிக விரைவாக யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ராஜீவ் குமார் கூறினார்.

ஜம்மு - காஷ்மீர் மக்கள், அவர்களுக்கான அரசை அவர்களே தேர்வு செய்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இது என் காதுகளில் ஒரு இசையைப் போல ஒலிக்கிறது, மக்கள், இளைஞர்கள், மகளிர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து, பெரிய அளவில் வாக்குச் சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஜனநாயகம் என்ற மரத்தின் ஆனிவேரானது மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கும்போதுதான் பலமாகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.