ஜம்மு - காஷ்மீரில் விரைவில் பேரவைத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று மக்களவைத் தேர்லின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவின்போது, இன்று காலை வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
மக்களவைத் தேர்தலின்போது, ஜம்மு - காஷ்மீரில் பதிவான வாக்குகள் உற்சாகத்தை அளிக்கின்றன. எனவே, மிக விரைவாக யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ராஜீவ் குமார் கூறினார்.
ஜம்மு - காஷ்மீர் மக்கள், அவர்களுக்கான அரசை அவர்களே தேர்வு செய்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இது என் காதுகளில் ஒரு இசையைப் போல ஒலிக்கிறது, மக்கள், இளைஞர்கள், மகளிர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து, பெரிய அளவில் வாக்குச் சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஜனநாயகம் என்ற மரத்தின் ஆனிவேரானது மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கும்போதுதான் பலமாகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா? பாஜக கோரிக்கையும் காங்கிரஸ் கிண்டலும்!

தமிழகத் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை!

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை

ஜம்மு - காஷ்மீரில் கனமழை! பள்ளி விடுதியில் சிக்கிய 34 பேரை மீட்ட ராணுவம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


