ஒடிசாவை சிறையிலிருந்து விடுவிக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள்: ஸ்மிருதி இரானி

பிஜு ஜனதா தளம் முழு தலைமையும் சிறைபிடித்துள்ளது என்கிறார் பாஜக மூத்த தலைவர்...

கோப்புப்படம்

Published On :

பிஜு ஜனதா தளத்தின் சிறையிலிருந்து ஒடிசாவை மீட்க பாஜகவிற்கு வாக்களிக்குமாறு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி மக்களை வலியுறுத்தியுள்ளார்.

ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட குஜாங்கில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய இரானி, முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு தன்னை வெளிப்படுத்தவும், மற்றவர்களைச் சந்திக்கவும் சுதந்திரம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

பிஜு ஜனதா தளம் முழு தலைமையும் சிறைபிடித்துள்ளது. ஜூன் 1 அன்று தாமரை பட்டனை அழுத்துவதன் மூலம் ஒடிசாவின் எதிர்காலத்தை இந்தச் சிறையிலிருந்து மீட்கலாம்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒடிசா முதல்வரை நியமிக்கும் என்று அவர் அறிவித்தார். பிஜேடி தலைவர்கள் சிட் பண்ட் ஊழல், சுரங்க ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

"இதையெல்லாம் ஒடிசா எவ்வளவு காலம் தாங்கும்?" என்று கேள்வி எழுப்பினார்.

பிஜேடி அரசு மாநிலத்தில் நிலம், நிலக்கரி, மணல் மற்றும் சுரங்க மாஃபியாக்களை வளர்த்து வருவதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆதரவாளர்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோலர்கள் மாநிலத்தின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக இடைவிடாமல் உழைத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.