வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!
/

கூகுள்-பே, போன்-பேக்கு போட்டியாக களமிறங்கும் அதானி குழுமம்?

இணையவழி பணப்பரிவர்த்தனை சேவைகளை விரைவில் வழங்க உள்ளது அதானி குழுமம்.

News image

கௌதம் அதானி

Updated On :28 மே 2024, 11:06 am

இந்தியாவில் இணையவழி பணப்பரிவர்த்தனை சேவைகள் சர்வ சாதாரணமாக மாறிவிட்ட சூழலில், கூகுள்-பே, போன்-பே போன்ற இணையவழி பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் தளங்களுக்கு போட்டியாக, அதானி குழுமம் விரைவில் களமிறங்க உள்ளது.

இது தொடர்பாக வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகாவும் அதானி குழுமத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பாக அதானி குழுமம் தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் தரப்படவில்லை.

Story image

ஏப்ரல் வரையிலான நிலவரப்படி, இந்தியாவின் இணையவழி பணப்பரிவர்த்தனையில் 48.9 சதவீத சந்தை பங்குகளுடன் வால்மார்ட் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை தளமான போன்-பே முதலிடத்தில் கோலோச்சி வருகிறது. அதற்கடுத்த இடத்தில், 37.7 சதவீத சந்தை பங்குகளுடன் கூகுள் நிறுவனத்தின் கூகுள்-பே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அதானி குழுமம் இவ்விரு நிறுவனங்களுக்கும் கடும் போட்டியாக உருவெடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கூகுள் பே

கூகுள் பே

Story image

இந்தியாவின் இணையவழி பணப்பரிவர்த்தனை சந்தை, அடுத்த ஐந்தாண்டுகளில் 814.43 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதானி குழுமம் அடுத்த பத்தாண்டுகளுக்கு உள்கட்டமைப்பில் 84 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் இணைய வழியிலான ஷாப்பிங் தளத்தையும் தொடங்கி, வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கவும் அந்நிறுவனம் திடமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அரசு தரப்பிலிருந்து முழு ஒப்புதல் கிடைத்தவுடன் அதானி குழுமத்தின் ’அதானி-ஒன்’ செயலி மூலம் ஷாப்பிங் சேவைகளை வழங்க உள்ளது.

இந்தியாவில் இணையவழி பணப்பரிவர்த்தனை சேவைகள் சர்வ சாதாரணமாக மாறிவிட்ட சூழலில், கூகுள்-பே, போன்-பே போன்ற இணையவழி பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் தளங்களுக்கு போட்டியாக, அதானி குழுமம் விரைவில் களமிறங்க உள்ளது.

இது தொடர்பாக வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகாவும் அதானி குழுமத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பாக அதானி குழுமம் தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் தரப்படவில்லை.

Story image

ஏப்ரல் வரையிலான நிலவரப்படி, இந்தியாவின் இணையவழி பணப்பரிவர்த்தனையில் 48.9 சதவீத சந்தை பங்குகளுடன் வால்மார்ட் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை தளமான போன்-பே முதலிடத்தில் கோலோச்சி வருகிறது. அதற்கடுத்த இடத்தில், 37.7 சதவீத சந்தை பங்குகளுடன் கூகுள் நிறுவனத்தின் கூகுள்-பே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அதானி குழுமம் இவ்விரு நிறுவனங்களுக்கும் கடும் போட்டியாக உருவெடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கூகுள் பே

கூகுள் பே

Story image

இந்தியாவின் இணையவழி பணப்பரிவர்த்தனை சந்தை, அடுத்த ஐந்தாண்டுகளில் 814.43 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதானி குழுமம் அடுத்த பத்தாண்டுகளுக்கு உள்கட்டமைப்பில் 84 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் இணைய வழியிலான ஷாப்பிங் தளத்தையும் தொடங்கி, வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கவும் அந்நிறுவனம் திடமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அரசு தரப்பிலிருந்து முழு ஒப்புதல் கிடைத்தவுடன் அதானி குழுமத்தின் ’அதானி-ஒன்’ செயலி மூலம் ஷாப்பிங் சேவைகளை வழங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.