முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

பிரான்ஸிடமிருந்து மேலும் 26 ரஃபேல் போர் விமானங்கள்: விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து!

பிரான்ஸிடமிருந்து 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

ரஃபேல் போர் விமானம் - கோப்புப்படம்

Published On :28 மே 2024, 3:46 pm IST

பிரான்ஸிடமிருந்து 26 ரஃபேல்-எம் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இம்மாதம் 30-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்காக பிரன்ஸிலிருந்து, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று விரைவில் தில்லிக்கு வர உள்ளது. இந்த குழுவினர் பாதுகாப்புத்துறை அமைச்சக உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்திய விமானப் படையின் பயன்பாட்டில் ஏற்கெனவே 36 ரஃபேல் போா் விமானங்கள் உள்ளன. இந்த நிலையில், இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும் விதமாக ரூ. 50,000 கோடிக்கு, 26 ரஃபேல் கடல் ஜெட் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஐ.என்.எஸ் விக்ராந்த், ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா ஆகிய விமானந்தாங்கி போர்க் கப்பல்களிலிருந்து, புதிதாக வரவிருக்கும் ரஃபேல் போர் விமானங்களை இயக்க முடியும் என்பது இவற்றின் சிறப்பம்சமாகும்.

இதற்கான டெண்டர் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே விடப்பட்டு அதற்கு இருநாட்டு அரசுகளும் ஒப்புதல் அளித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நிகழ் நிதியாண்டின் இறுதிக்குள் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.